தமிழகத்தில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் வேலையின்மை காரணமாக பலர் அவதிப்பட்டனர். அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் TN MRB சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், அறிவிக்கப்படாமல் இருந்த அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: கிராம சுகாதார செவிலியர் (மாற்றுத்திறனாளிகள் பிரிவில் உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)
காலிப்பணியிடங்கள் : 39 பணியிடங்கள்.
அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாத சம்பளம் :ரூ.19500 முதல் ரூ.62000 வரை
விண்ணப்பதாரரின் தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் துணை செவிலியர் மருத்துவச்சி பள்ளியிலிருந்து ANM தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300
விண்ணப்படிக்கும் முறை : mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 9 (இன்று )
மேலும் இந்த பணிக்கான கூடுதல் தகவலை அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து கொள்ளலாம்.