அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
3 நாட்கள் விடுமுறை:
இந்தியா முழுவதும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா என்ற பெருந்தொற்று பரவி வந்தது. இதனால் தொற்று பாதித்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு என கட்டுப்பாடு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்குங்களில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் பிப்ரவரி 21 முதல் முழு ஊரடங்கு? பிரதமர் விளக்கம்!
இந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஐந்து கட்டங்களாக ஒடிசா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பஞ்சாயத்து முதற்கட்ட தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கடைசி மற்றும் ஐந்தாவது கட்ட தேர்தல், 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
IPL 2022: சன்ரைசர்ஸ் அணியின் நியூ ஜெர்ஸி இன்று வெளியீடு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
மேலும் ஒடிசா மாநில தேர்தல் குறித்து அனைத்து துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அனைத்து அரசு கிராமப் பஞ்சாயத்துகளில் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் உயர்நிலை அமைப்புகள் போன்றவற்றின் ஊழியர்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மேலும் இதற்காக அவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதாவது, வாக்குப்பதிவு முந்தைய நாள், வாக்குப்பதிவு பிந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு வாழுங்க உள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.