Post Office சேமிப்பு திட்டம் – 6.6% வட்டி விகிதம்! 1,500 ரூபாய் முதல் டெபாசிட்!
மத்திய அரசின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறைவான அளவில் பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் மாதாந்திர வருமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சேமிப்பு திட்டம்:
மத்திய அரசின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் தங்களது முதலீடுகளை செலுத்தி வருகின்றன. அவ்வாறு சேமிக்க திட்டமிடுபவர்கள் முதலில் சிறந்த சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதாவது உங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைப்பதுடன், ரிஸ்க் ஏதுமில்லாத மற்றும் மாத வருமானம் பெறும் வகையில் தொடங்க வேண்டும்.
அமெரிக்காவின் முதல் பெண் அதிபரான கமலா ஹாரிஸ் – 1.25 மணிநேரம் பதவி வகிப்பு!
அந்த வகையில் குறைந்த அளவில் பணத்தை சேமிக்க நினைக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் அஞ்சல் துறையில் மாதாந்திர சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கை தொடருபவர்கள் ரூ.1,500 முதல் 4.5 லட்சம் வரை சேமிக்கலாம். கூட்டுக் கணக்கில் (ஜோஇன் Account) பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை சேமிப்பு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 80 சி – ன் கீழ் வரி விலக்கு கிடையாது. இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு.
தமிழக அரசின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த மாத வருவாய் திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த மாத வருவாய் அஞ்சல் திட்டம் தொடங்கப்பட்ட 1 மாதம் முடிந்த நாள் முதல் வட்டித்தொகை வழங்கப்பட்டுவிடும். இந்த வட்டியானது சேமிப்பு தொகை முதிர்ச்சி அடையும் வரை வழங்கப்படும். மேலும் வட்டித் தொகையை நீங்கள் மாதந்தோறும் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில் பெறாமலும் இருக்கலாம். ஆனால் வட்டித்தொகைக்கு தனியாக வட்டி வழங்கப்பட மாட்டாது.