தமிழக அரசின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கு வருபவர்களை ஆதார் மூலம் அடையாளம் சரிபார்க்கும் திட்டத்தை 100 அலுவலகங்களுக்கு நீட்டித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்திரப்பதிவு:
தமிழகத்தில் சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் சமீப காலத்தில் போலி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலி பத்திரங்கள் மூலம் எளியவர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பல இடங்களை அபகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!
எனவே பத்திரப் பதிவுகளானது ஸ்டார் 2.0 என்னும் சாப்ட்வேர் ஆன்லைனில் நடைபெறுகிறது. சொத்து விற்பவர், வாங்குபவர் குறித்த அடையாளங்கள் சரிபார்ப்பு துல்லியமாக்கப்பட்டுள்ளது. எனவே மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பதிவுக்கு வருபவர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி அடையாள விவரங்களை சரி பார்ப்பதற்கு சார் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
EPFO ஓய்வூதிய உயர்வு, வட்டி விகிதம் அதிகரிப்பு – மத்திய அரசின் குழு ஆலோசனை!
சார்பதிவாளரின் கணினியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது, 109 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி முதற்கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2வது கட்டமாக 100 அலுவலகங்களுக்கு டிசம்பர் 1 முதல் இந்த வசதி வழங்கப்படும் என கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி ஆவணங்கள் ஆள்மாறாட்டம் முதலியன தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.