தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் 57000 காலியிடங்கள் – நவ.30 கடைசி நாள்! AICTE அனுமதி!
தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதலாமாண்டு காலி இடங்களை நவம்பர் 30ம் தேதி வரை நிரப்பி கொள்ளலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. கொரோனா அதிகம் பரவும் இந்த நேரத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் கல்லூரிகளில் கூடுவதை தவிர்க்க இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற தொடங்கியது. இந்தாண்டு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்களால் அனைத்து மாணவர்களும் 12ம் வகுப்பில் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாணவர்களிடையே கல்லூரிகளில் சேருவதற்க்கு கடும் போட்டி நிலவியது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்து கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கலை கல்லூரியை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் அக்டோபர் 17ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்று மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் இந்தாண்டு 1.52 லட்சம் இடங்கள் உள்ளது. ஆனால் 95 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு? கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!
அதனால் தனியார் கல்லூரிகள் மீதமுள்ள 57,000 மாணவர் சேர்க்கை காலியிடங்களை வரும் 30ம் தேதி வரை நிரப்பி கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ கால அவகாசம் அளித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் ஒருங்கிணைப்பு வகுப்புகளை தொடங்க வேண்டும். மேலும் 30ம் தேதிக்குள் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்களை துவங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.