தமிழக முதல்வர் அறிவிப்பின்படி 5570 வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளையில் மக்கள் போராட்டமாக கருதப்பட்ட வழக்குகளில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட 5570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வழக்குகள் வாபஸ்:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் ஆலைக்கு எதிரான போராட்டம் என பிரச்சனைகள் வெடித்தது. இதில் பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியாக எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? இன்று முக்கிய ஆலோசனை!
மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் முதலியன வாபஸ் பெறப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். 2011 -2021 காலகட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய 5,570 வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
நீட் தேர்வு அச்சம் – தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!
அதனை தொடர்ந்து எட்டு வழிச்சாலை, மீத்தேன் மற்றும் நியூட்ரினோ ஆகிய திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 405 வழக்குகளும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய 2682 வழக்குகள், விவசாய சட்டத்திற்கு எதிராக போராடிய 2831 வழக்குகள், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடிய 26 வழக்குகளும், கூடங்குளம் ஆலைக்கு எதிராக போராடிய 26 வழக்குகளும் சேர்த்து மொத்தம் 5570 வழக்குகள் தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.