நீட் தேர்வு அச்சம் – தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!
தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த மாணவி கனிமொழி நேற்று நீட் தேர்வு எழுதிய நிலையில் தேர்வு சரியாக எழுதவில்லை என்று என்ற மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வு அச்சம்:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசால் நீட் என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசின் நீட் தேர்வால் தமிழகத்தில் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏழை, எளிய அரசு பள்ளியில் படிக்க கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத போதிய பயிற்சி கிடைக்காது. அதனால் அவர்கள் தேர்வில் வெற்றி பெறுவது கடினம். மேலும் அவர்களின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு சிதைக்கப்படும் என்று கருத்துகள் முன் வைக்கப்பட்டது.
OLA நிறுவனத்தில் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – CEO அறிவிப்பு!
நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்கிற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் பல மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற மன உளைச்சலில் அரியலூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடிமகன்களுக்கு நல்ல செய்தி : இனி டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் – அமைச்சர் உத்தரவு!!
அரியலூர் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 562.28 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்த சூழலில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.