தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத 50000 மாணவர்களுக்கு புதிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி தற்போது இரண்டு தேர்வுகள் முடிவடைந்து இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்ளாத 50 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுத்தேர்வு
தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதி வருகின்றனர். சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய தமிழ் முதல் தாள் தேர்வில் 50000 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அது பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை செய்ததில், அது 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எனவும், அவர்கள் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களையும், 12 ஆம் வகுப்பு பாடங்களையும் எழுத வேண்டிய நிலைமை இருந்ததால், தேர்வுக்கு வரவில்லை என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 20% சம்பள உயர்வு!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத சுமார் 50000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அந்த மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து துணை தேர்வில் கலந்து கொள்ள வைக்க ஆலோசனை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.