மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 20% சம்பள உயர்வு!
மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த சம்பள உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ளது. மேலும், சம்பள உயர்வு தொடர்பான முழு அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
சம்பள உயர்வு:
மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். மேலும், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சம்பள உயர்வு குறித்தான கோரிக்கை வைத்தும் எவ்வித சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPTCL) மற்றும் மின்சாரம் வழங்கல் ஊழியர்களுக்கான (ESCOM) சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தியதாகவும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான சம்பளத்தை 15 சதவீதம் உயர்த்தியுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கான இந்த சம்பள உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.