Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – 500 ரூபாய் முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு! கைநிறைய லாபம்!
இந்திய அஞ்சல் துறையின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் குறித்த முழு தகவல்களை இப்பதிவில் காண்போம்.
பிஎப்:
இந்திய அஞ்சல் துறை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுராக்ஷ யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற திட்டங்களில் அதிக அளவிலான மக்கள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் மிக பொருத்தமானவையாகும்.
பிப்ரவரி 14 முதல் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறப்பு – இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்!
மற்ற திட்டங்களை தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி திட்டம் அதிக வட்டி விகிதத்தையும் பாதுகாப்பான வட்டி விகிதத்தையும் அளிக்கிறது. இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகப்பட்சம் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் பயனாளர் 15 ஆண்டுகள் வரை தொகையை செலுத்தலாம். கணக்கு முதிர்வு காலத்தில் கணக்கை மூடுவதாக பாஸ்புக்கை சமர்ப்பித்து, முதிர்வு கட்டணத்தை பெறலாம். தேவைப்படும் பட்சத்தில் மேலும் 5 ஆண்டுகளுக்கு பாலிசி காலத்தை நீடித்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பிப்.19ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!
பிஎப் கணக்கில் ஆண்டுதோறும் வட்டி தொகை செலுத்தபடும். இதை எப்போது வேண்டுமானாலும் பயனர்கள் எடுத்து கொள்ளலாம். மேலும் பிஎப் கணக்கில் முதலீடானது மொத்தமாகவோ அல்லது தவணை முறை மூலமாகவே செலுத்தத்தலாம். இக்கணக்கை தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இதிலிருந்து தொகையை எடுக்க முடியும். 4 வது முந்தைய ஆண்டின் இறுதியில் திரும்பப் பெறுவதற்கான தொகை 50 சதவிகிதம் வரை கிரெடிட் எடுக்கலாம்.