தமிழகத்தில் பிப்.19ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பொது விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அனைத்து வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தேர்தல் தொடர்பான பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது.
IND vs WI: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் மகிழ்ச்சி!
அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு தேர்தல் நாள் அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களுக்கு மட்டும் தனியாக மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புத்தகப்பை இல்லா தினம் ரத்து!
தேர்தல் நடைபெறும் நாளன்று அனைத்து மக்களும் வாக்களிக்க ஏதுவாக பிப்ரவரி 19ம் தேதி அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவி சட்டம் 1881 பிரிவு 25ன் கீழ் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.