மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்படாது, 50% மாணவர்களுடன் நேரடி வகுப்புகள் – முதல்வர் அறிவிப்பு!
மத்திய பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் முழுவதும் மூடப்படாது என்றும், நேரடி வகுப்புகள் 50% மாணவர்களுடன் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள்:
நாட்டின் அனைத்து முக்கிய மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் தற்போது கல்வி நிலையங்களை மூடும் எண்ணம் இல்லை என்று அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் திறந்தே இருக்கும், ஆனால் வகுப்புகள் ஐம்பது சதவீத மாணவர்களுடன் நடத்தப்படும். மேலும் கோவிட் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேவை ஏற்பட்டால் பள்ளிகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்!
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஓரிரு நாட்களில் நிலைமையை ஆராய்ந்த பின்னர், மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். அந்த நேரத்தில் தேவை ஏற்பட்டால் பள்ளிகளை மூடலாம். இதற்காக நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் வரும் நாட்களில் நிலைமைக்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
போபால், இந்தூர் மற்றும் பிற மாவட்டங்களில் அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் இருப்பதால் அரசுக்கு இது மிகவும் நெருக்கடியாக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த மாநிலத்தில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பரிசீலனைக்கு பின் அடுத்த முடிவு எடுக்கும் வரை, 50 சதவீத திறனுடன் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தனது உரையில் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு அரசின் அறிவுறுத்தல்களின் படி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.