வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு தொடரும் – தனியார் அலுவலகங்கள் 50% திறனில் திறப்பு!
டெல்லியில் தற்போது கொரோனா வைரஸின் தினசரி பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் தனியார் அலுவலகங்களை 50% திறனுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ள அரசாங்கம் வார இறுதி ஊரடங்கு உத்தரவை தொடருவதற்கு முடிவு செய்துள்ளது.
முழு ஊரடங்கு
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் அதி தீவிரமடைந்த கொரோனா 3ம் அலைத்தொற்றால் யூனியன் பிரதேசம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் ஆகியவை அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தினசரி பாதிப்புகளில் வீழ்ச்சியை சந்தித்து வரும் டெல்லியில், சில தளர்வுகளை அளிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தனியார் அலுவலக ஊழியர்கள் மட்டும் 50% திறனுடன் அலுவலகத்திற்கு வருகை தரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஜன.23ம் தேதி முழு ஊரடங்கு அமல்? அரசு தரப்பு விளக்கம்!
இதற்கு முன்னதாக நகரத்தில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு முதல்வர் கெஜ்ரிவால் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பைஜாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், நகரின் பல பகுதிகளில் உள்ள வணிகர்கள் ஒற்றைப்படை-இரட்டை முறையின் அடிப்படையில் மாற்று நாட்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், தேசிய தலைநகரில் இப்போதுள்ள கொரோனா வைரஸ் நிலைமை மேம்படும் வரை வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த லெப்டினன்ட் ஜெனரல் முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில் அத்தியாவசியமற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை காலை வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதே போல வார நாட்களில் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் அனைவர்க்கும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய கோரிக்கை!
என்றாலும் தனியார் அலுவலக ஊழியர்கள் மட்டும் 50% திறனுடன் அலுவலகத்திற்கு வருகை தரலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கடந்த ஜனவரி 20ம் தேதியன்று 12,306 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 43 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொரோனா நேர்மறை விகிதம் 21.48 சதவீதமாக குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக டெல்லியில் ஜனவரி 13 அன்று 29.21 நேர்மறை விகிதத்துடன் 28,867 கொரோனா தினசரி வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.