தமிழகத்தில் மீண்டும் ஜன.23ம் தேதி முழு ஊரடங்கு அமல்? அரசு தரப்பு விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் ஜன.23ம் தேதி முழு ஊரடங்கு அமல்? அரசு தரப்பு விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் ஜன.23ம் தேதி முழு ஊரடங்கு அமல்? அரசு தரப்பு விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் ஜன.23ம் தேதி முழு ஊரடங்கு அமல்? அரசு தரப்பு விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 31ம் தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுடம் அமலில் உள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வி பல்வேறு தரப்புகளில் இருந்தும் எழுந்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு திடீரென்று சில வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் என்று முன்னதாக கணிக்கப்பட்ட கொரோனா 3ம் அலை பாதிப்பு அரசின் தீவிர கட்டுப்பாடுகளினால் ஜனவரி மாதம் வரை கொரோனா பரவல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத தொடங்கத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை பரவல் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை உறுதி செய்து வந்தது. கொரோனா பாதிப்பின் தினசரி எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டிய நிலையில், தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 7ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்க திட்டமிடப்பட்டு இதுவரை ஜனவரி 9 மற்றும் 16ம் தேதிகளில் அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவைகளான பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்து விதமான பொது போக்குவரத்து மற்றும் பொது நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் அனைவர்க்கும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய கோரிக்கை!

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் வரும் 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்று அரசு அதிகாரிகள், வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் இடையில் எழுந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதனால் ஜனவரி 23ம் தேதி முழு ஊரடங்கு விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு மீண்டும் ஆலோசித்து இன்று அல்லது நாளைக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!