தமிழக கூட்டுறவு வங்கிகளில் அனைவர்க்கும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் பேரில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசுக்கு பொதுமக்கள் சார்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள அனைவருக்கும் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற அனைவரும் நகைக்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில் தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடி வழங்குதலை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கும் வகையில் பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய T20 உலகக்கோப்பை போட்டிகள் – ஒரு அலசல்!
அதன்படி 5 சவரனை இரண்டு மூன்று பகுதிகளாக பிரித்து வைத்துள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், 40 கிராமுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில் 37 லட்சத்திற்கு அதிகமானோர் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.11 தேதி கடைசி நாள்!
இத்தகைய நிபந்தனை நகைக்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து திமுகவிற்கு வாக்களித்தவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதனால் தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்ததை போல் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி வழங்குமாறு மக்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குடும்பத் தலைவிக்கு வழங்குவதாக கூறிய ரூ.1000 வழங்கவில்லை என்பதால் இத்தகைய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.