புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 50% பேர் மட்டுமே அனுமதி!

0
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 50% பேர் மட்டுமே அனுமதி!
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 50% பேர் மட்டுமே அனுமதி!
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 50% பேர் மட்டுமே அனுமதி!

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவ தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

கொரோனா பரவல்:

கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் ஒமிக்ரான் தொற்றும் வேகமெடுத்து உள்ளது. அதனால் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக KL ராகுல் – BCCI செயலாளர் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!

இந்த அறிவிப்பின் படி திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உணவகங்கள், பார்கள், மதுபானக் கூடங்கள், மால்கள், வணிக நிறுவனங்கள், சலூன், அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் பக்தர்கள் இன்றி கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மேலும் சில கட்டுப்பாட்டை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

இதில் கூறியதாவது, அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே பணிபுரிய வேண்டும். அத்துடன் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு செயலர்கள், அரசுத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் முழுமையாக பணிக்கு வர வேண்டும். இதனை தொடர்ந்து கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் போன்றவர்கள் தேவைப்பட்டால் அலுவலகத்துக்கு வரலாம் புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!