தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்ததால் மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் விடுமுறை என்பதை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் வாட்ஸ் ஆப் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2021 -2022ம் கல்வியாண்டில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

Airtel, Jio & Vi தினசரி 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அதன் படி பொதுத் தேர்வுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் திருப்புதல் தேர்வும் நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் விடுமுறை என்று கருதாமல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் அரசு யூடியூப் வீடியோக்கள் மூலமாகவும் தொடர்ந்து பாடங்களை படிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி இயக்குனரின் முக்கிய அறிவுறுத்தல்!

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவது குறித்து குறித்து தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நீட் தேர்வுக்கு தமிழக அரசின் ஹைடெக் ஆய்வகம் மூலமாக பல பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதனால் தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!