தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி இயக்குனரின் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அரசு பள்ளிகளில் ஆங்கில பாட ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
அரசு பள்ளி:
தமிழகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதன் பிறகு நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு டிசம்பர் மாதம் திருப்புதல் தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு? பொது போக்குவரத்திற்கு கட்டுப்பாடு! முதல்வர் இன்று ஆலோசனை!
மீண்டும் பள்ளிகளை திறக்கப்படும், சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு கவனம் தேவை – ஊரடங்கு அமலாகுமா?
இது குறித்த ஆய்வறிக்கையை அதிகாரிகள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் சமர்ப்பித்தனர். ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. மேலும் வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும். அதை மாற்ற வேண்டும் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும் பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.