தமிழக ஹோட்டல்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உணவகங்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
கோரிக்கை மனு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் அரசால் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 21ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட் விநியோகம்? அரசு பரிசீலிக்க உத்தரவு!!
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதற்காக அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கொரோனா தொற்று ஊரடங்கினால் ஓட்டல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 10% நபர்கள் மட்டுமே பார்சல் உணவு பெறுகின்றனர். இதனால் 80% ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களின் அத்தியாவசிய குடும்ப தேவைக்கான பணம் கூட ஈட்ட முடியவில்லை.
TN Job “FB Group” Join Now
வங்கி கடன்களுக்கான வட்டி, மாதாந்திர தவணை தொகை செலுத்தாமல் ஏராளமான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், வாழை இலை, பால், பழங்கள் அதிகளவு கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகளுக்கு பெறும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் நடமாட்டம் தெருக்களில் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் உணவு தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து ஓட்டல்களிலும் கட்டுப்பாடுகளுடன், 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.