இறப்பு & திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

0
இறப்பு & திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
இறப்பு & திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
இறப்பு & திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கூடுதல் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் மாநில வாரியாக விதிக்கப்பட்டு வருகிறது.

50 பேர் மட்டுமே அனுமதி:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கொரோனா மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் பல்வேறு அவதாரங்களால் கேரளா மாநிலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் திங்கள் அன்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவில் இறப்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

IND vs SA: 3வது டெஸ்டில் களமிறங்குவேன் – கேப்டன் விராட் கோஹ்லி உறுதி!

மேலும் அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து 15 முதல் 18 வயது வரை உடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை இந்த வார இறுதிக்குள் முடிக்குமாறு சுகாதார மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் கேரளாவில் கடந்த ஒரு நாளில் மட்டும் 6,238 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,390 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 34,902 பேர் இன்னும் சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!