IND vs SA: 3வது டெஸ்டில் களமிறங்குவேன் – கேப்டன் விராட் கோஹ்லி உறுதி!
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
விராட் கோஹ்லி உறுதி:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர். இத்தொடரில் மீதமுள்ள 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளதால் வருகிற ஜனவரி 23 ஆம் தேதியில் முடிவடைகிறது. செஞ்சுரியனில் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படும் நேரம் நீட்டிப்பு – மத்திய அரசு அனுமதி!
ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி அணியில் இடம்பெறவில்லை. விராட் கோஹ்லிக்கு பதில் இந்திய டெஸ்ட் அணி வைஸ் கேப்டன் கேஎல் ராகுல் அணியை வழிநடத்தினார். 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் 2வது போட்டிலேயே வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஜனவரி 26 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் பேட்டிங்கை குறித்து அனைத்து தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த விராட் கோஹ்லி நான் முழுமையாக குணமடைந்ததாகவும் , டிசைடெர் போட்டியான 3வது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தவறுகளை திருத்தி சிறப்பாக விளையாடுவார் என விராட் கோஹ்லி கூறினார்.