6 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வு – யூனிட்டுக்கு 50 காசுகள் வரை அதிகரிப்பு!
இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுக்கு பிறகு தற்போது மின் கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் யூனிட்க்கு 50 காசுகள் வரை அதிகரிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
மின்கட்டணம் உயர்வு:
உலகில் உள்ள மக்களை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் தேவை என்பது இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு அதற்கான கட்டணங்களும் அதன் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது.
TNPSC குரூப் 2, 2A & 4 ,VAO தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் வடக்கு மின் விநியோக நிறுவனம் மற்றும் தெற்கு மின் விநியோக நிறுவனம் ஆகியவை மின் கட்டணத்தை 18% உயர்த்தக் கோரி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். ஆனால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை 14% மட்டுமே உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தெலங்கானாவில் வீடுகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் முதல் 50 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.1.45ல் இருந்து ரூ.1.95 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 51 முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.2.60 இருந்து ரூ.3.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் சலூன் கடைகள் உட்பட சிறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.