தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் 18ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. மேலும் 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீது விவாதங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.பெரியசாமி அவர்கள் நகைக்கடன் குறித்த முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

நகைக்கடன்:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 18ஆம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசின் பல நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம் பெற்றுள்ளது.

IRCTC ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இதில் குறிப்பாக தமிழ்மொழி வளர்ச்சி, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகளிருக்கு என்று பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவியர் உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக அரசுப் பள்ளிகளில் 6 -12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்த மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

TNPSC குரூப் 2, 2A 5000 + காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் மட்டுமே !

இதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடிக்கு என்று ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கு 48 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மோசடியில் ஈடுபட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, இந்த நிலையில் 48 லட்சம் பேர் நகைக்கடன்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 14.60 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!