இந்திய U19 கேப்டன் யாஷ் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
இந்திய U19 கேப்டன் யாஷ் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய U19 கேப்டன் யாஷ் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய U19 கேப்டன் யாஷ் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய U-19 கேப்டன் யாஷ் துல் உட்பட மேலும் 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான 2வது லீக் போட்டியில் தொற்று உறுதியான வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி:

உலகில் 90 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவலின் 2வது அலை குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் ஜனவரி 14 ஆம் தேதி 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் நோய்த்தடுப்பு பாதுகாப்புகளுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு & ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனத்திற்கு – டிஜிபி முக்கிய அறிக்கை!

4 குரூப்பில் 16 அணிகள் போட்டியிடும் இத்தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்தியா, அயர்லாந்து அணிகள் அணிகள் மோதும் இந்தியாவுக்கான 2வது லீக் போட்டி நேற்று தரூபா, டிரினிடேடில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கோவிட் பரிசோதனையான RT-PCR டெஸ்ட் எடுக்கப்பட்டது. இப்பரிசோதனை முடிவில் இந்திய U-19 கேப்டன் யாஷ் துல் உட்பட மேலும் 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? மாநில அரசு ஆலோசனை!

இந்திய U-19 கேப்டன் யாஷ் துல், விக்கெட் கீப்பர் ஷேக் ரஷீத், ஆராத்யா யாதவ், வாசு வாட்ஸ், மானவ் பராக் மற்றும் சித்தார்த் யாதவ் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நேற்று இந்தியாவுக்கான 2வது லீக் போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது. பின்பு U-19 உலக கோப்பை வாரியம் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு நோய் தொற்று உறுதியான வீரர்கள் போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களைக் கொண்டு அயர்லாந்து எதிரான 2வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் யாஷ் துலுக்கு பதிலாக சிந்து அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் இந்திய ஜூனியர் அணி வெற்றி பெற்றது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!