மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் ரூ.4,500 கூடுதல் சம்பளம் – முக்கிய தகவல்!
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகளின் கல்வி செலவிற்காக வழங்கப்படும் கல்விப்படி இந்த ஆண்டு உயர்த்தி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
கூடுதல் ஊதியம்:
நாடு முழுவதும் மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, போக்குவரத்துப்படி, கல்விப்படி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் சலுகைகளில் அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா பெருத்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி செலவிற்கு வழங்கப்படும் கல்விப்படி இந்த ஆண்டு உயர்த்தி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அவ்வாறு உயர்த்தப்பட்டால் இதுவரை வழங்கப்பட்டு வரும் கல்விப்படி ரூ.2,250 லிருந்து ரூ.4,500 வரை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய கல்விப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சுமார் 18 மாதங்களாக நிலுவையில் இருந்து வரும் அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய ஊதிய உயர்வு தகவல் அனைத்து மத்திய அரசு பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.