தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி – 51,017 விவசாயிகளுக்கு சான்றிதழ்! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - 51,017 விவசாயிகளுக்கு சான்றிதழ்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - 51,017 விவசாயிகளுக்கு சான்றிதழ்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி – 51,017 விவசாயிகளுக்கு சான்றிதழ்! அமைச்சர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கையினை ஏற்று சேலம், நாமக்கல் மாவட்ட 51,017 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் கண்டறிய கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டு பயிர்க்கடன் வழங்குவதற்காக 11,000 கோடி ருபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க்கடன் வழங்குவதற்கான ஒதுக்கீடு முறையே 746 கோடி ரூபாய் மற்றும் 534 கோடி ரூபாய் ஆகும். இதில் நிர்ணையிக்கப்பட்ட இலக்கை எய்தியது, சேலம் மாவட்டத்தில் 614.92 கோடி ருபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 502.62 கோடி ஆகும்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

பயிர்க்கடன் என்பது விவசாயிகள் பயிர் செய்வதற்காக மட்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு பயிர்க்கடன் அளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில்நுட்ப குழுவால் கலந்தாலோசித்து மாநில தொழிநுட்ப குழுவிற்கு அளிக்கப்பட்டு ஸ்கேல் ஆப் பைனான்ஸ் அளிக்கப்படுகிறது. சேலம் மற்றும் நாமக்கல்லில் பொதுவாக சோளம் மற்றும் மரவள்ளி கிழங்கு போன்றவற்றிற்கு பயிர்க்கடன் அளவு குறைவாக உள்ளதால், அதிக அளவு பயிர்களுடன் உள்ள மஞ்சள் மற்றும் வாழை போன்ற பயிர்களை குறிப்பிட்டு கடன் பெற்றுள்ளனர் என்பது அரசின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் பயிர் செய்ததை விட அதிக பரப்பளவில் பயிர் செய்திருப்பதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ள போதிலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அளிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் 1,11,803 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் அளிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு ரத்து அறிவிக்கப்படவில்லை. இத்நல் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் முதல்வரை சந்தித்து தங்களுக்கும் பயிர்க்கடன் ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து பயிர்க்கடன் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்தால் தான் பணம் கிடைக்கும்!

முதல்வர் இவர்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு பணி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பை கருத்தில் கொண்டு, மேலும் இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி நிலுவையில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.63 கோடி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் அளிக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறியுள்ளார். அரசின் இந்த அறிவிப்பினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!