தமிழக மருத்துவத்துறையில் 4318 காலிபணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மருத்துவத்துறை தொடர்பான 136 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
மருத்துவத்துறை காலிபணியிடங்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பாக 136 அறிவிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதாவது, மருத்துவத்துறை தொடர்பான இந்த 136 அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, தாளவாடி மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்கான எந்த வசதிகளும் இல்லாத காரணத்தினால் கூடிய விரைவில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பாவ்னியை ப்ரொபோஸ் செய்த அமீர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
மேலும், தமிழகத்தில் தொழு நோய் இல்லாத தமிழகம் என்பதை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புன்னகை என்கிற ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மலை கிராமத்தில் படித்த ஒரு பெண்ணிற்கு முறையாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அந்த பெண்ணின் மூலமாகவே வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மலை கிராமங்களிலும் புன்னகை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, கரு முட்டை தானம் என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால், 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் பெண்ணிடம் இருந்து மட்டுமே கருமுட்டை பெற வேண்டும். இது தொடர்பான விதிமுறைகளை முறையாக மருத்துவ நிர்வாகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் போலி மருந்து மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மருத்துவத்துறையில் காலியாக இருக்கும் 4318 பணியிடங்கள் விரைவில் நிரப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.