தமிழகத்தில் 4300 மருத்துவக் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 4300 மருத்துவக் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 4300 மருத்துவக் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 4300 மருத்துவக் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில், சென்னை அரசு பல் மருத்துவமனையில் மருத்துவ தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதை மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ தினம்:

தமிழக அரசு மருத்துவ துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று பல புதிய மருத்துவ திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதைய அரசு சார்பில் மருத்துவத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த மருத்துவமனைகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்து ஏழை மக்களுக்கு பயனளித்து வருகிறது. தமிழகத்தில் மாவட்டம் தோறும் புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டி ஏழை, எளிய மாணவர்கள் பயனடையும் விதமாக உதவி புரிந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ தினத்தை தொடங்கி வைத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். இதையடுத்து நடைபெற்ற மருத்துவ கண்காட்சியையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், 1953 ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மருத்துவ கல்லூரியின் 63வது ஆண்டு தொடக்க தினத்தை கொண்டாடி வருவதாகவும், ஆசியாவிலேயே அதிக அளவில் புற்று நோயாளிகளுக்கு அதாவது சுமார் 3.20 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், நர்ஸ்கள், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளுக்கு நாளை (ஆக.20) மின்தடை – முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 4,300 மருத்துவ பணியிடங்களை வருகிற செப்டம்பர் மாதம் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் கண் மருத்துவத்துக்காக ரூ.66 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இன்னும் 2 வாரங்களுக்குள் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த கல்வியாண்டிருக்குள் ஒட்டு மொத்த அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கண் பரிசோதனை எடுக்கப்பட்டு இலவச கண்ணாடி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் நகர்ப்புறங்களில் 703 புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும், அதனை தொடர்ந்து திருச்சியில் புதிய நர்சிங் கல்லூரி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!