மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – மேலும் 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் வருகிற ஜூலை மாதத்தில் மேலும் 4% சம்பள உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி சம்பள உயர்வு எப்போதும் மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வும் கிடைக்கும். இந்த சம்பள உயர்வால் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு? புதிய வகை வைரஸ்! அமைச்சரின் விளக்கம்!
இந்த கொரோனா கால கட்டத்தில் தான் 28 சதவீதமாக இருந்த சம்பளம் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31% ஆக இருந்தது. மேலும், இந்த மார்ச் மாதத்தில் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதே போல வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஏப்ரல் மாத சம்பளத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்தும் நிதி அமைச்சகம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் 4% உயர்வு அளிக்கப்பட்டால் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும். 4% சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் 20,000 ரூபாய்க்கு மேல் சம்பள உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.56,900 எனில், 38 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் ரூ.21,622 வரை உயர்வு கிடைக்கும்.