தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு? புதிய வகை வைரஸ்! அமைச்சரின் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் புதிய வகை வைரஸ் பரவுவதால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து காவல் துறையினருக்கான விடுமுறை ரத்து – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி கொண்டிருக்கிறது. இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல், உடல் வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குகிறது. மேலும் இங்கு குறிப்பாக கொல்லம் பகுதியில் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை வைரஸுக்கு தக்காளி காய்ச்சல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தக்காளி வைரஸ் என்பது ஏற்கனவே சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்றாகும். இது நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவினால் இந்த வைரஸ் பரவுகிறது என்றும் கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்திற்கு இந்த புதிய வைரஸ் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் எந்த வகை நோய்த் தொற்று வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக மருத்துவத்துறை தயார் நிலையில் உள்ளதாகவும் அண்டை மாநிலங்களில் வைரஸ் பற்றி கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.