மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில அரசும் 7-வது ஊதிய குழுவின் படி அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு வேகமெடுத்து பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. அந்த தொகையானது நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தபட்டது. பிறகு 2021ம் ஆண்டு அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் ஊழியர்களின் நலன் கருதி அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டு 31% ஆக அதிகரிக்கப்பட்டது. பிறகு நடப்பு நிதியாண்டில் 3% உயர்த்தப்பட்டு 34% ஆக வழங்கப்பட்டு வந்தது.
எப்போதும் ஒரு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி 2022ம் ஆண்டில் 3ம் காலாண்டில் அகவிலைப்படி 2வது முறையாக 4% உயர்த்தப்பட்டு மொத்தமாக 38% ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசை போல 4% உயர்த்தியுள்ளது.
அபார்ட்மென்டுகளில் வசிப்போரின் கவனத்திற்கு.. உயர்த்தப்பட்ட மின்கட்டணம்? – மக்கள் அவதி!
Exams Daily Mobile App Download
நேற்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி 4% அகவிலைப்படி உயர்வு முன்மொழியப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. இந்த 4% உயர்வு 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 1.35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்