அபார்ட்மென்டுகளில் வசிப்போரின் கவனத்திற்கு.. உயர்த்தப்பட்ட மின்கட்டணம்? – மக்கள் அவதி!
தமிழகத்தில் கடந்த மாதம் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தின் காரணமாக பல புதிய மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணத்தில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது.
மின்கட்டணம்:
தமிழகத்தில் வீட்டு மின் பயனர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு அளித்து வருகிறது. இதைத்தவிர 500 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கும் மானியம் அளித்து வருகிறது. இதனால் மின்வாரியத்தின் வருமானம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அரசுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை ஈடு செய்வதற்காக மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்துமாறு தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது. முதலில், மின்கட்டண உயர்வை அரசு விரும்பவில்லை.
எனினும், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டுவதற்கான நடவடிவகையாக மின்கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மானிய கட்டணத்தையும் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாகவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு தனி தனி மின் மீட்டர் இருக்கும், ஆனால் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பொதுவான இடங்களான நடைபாதை, படிக்கட்டுகள், கூட்டமிடும் அறை, நீர் மோட்டார் பம்ப், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கு சேர்த்து தனியாக 1 மின் இணைப்பு அளிக்கப்பட்டிருக்கும்.
தமிழக மாணவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டாம் – அரசின் முக்கிய அறிவுறுத்தல்!
Exams Daily Mobile App Download
இதற்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரையிலான கட்டண மானியம் போன்றவை அளிக்கப்பட்டு வந்தது. இனி, இந்த மின் இணைப்புகளுக்கு வீட்டு பிரிவு கணக்கீடு செய்யப்பட மாட்டாது என்றும், இவற்றிற்கு 1 யூனிட்டுக்கு ரூ.8 என்ற கமர்சியல் கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்றும் அரசு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட கட்டணத்தின் படி அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்கள் மூலம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்