மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு – அடுத்ததடுத்து வரும் நான்கு சலுகைகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனால் அரசு ஊழியர்களுக்கு இன்னும் நான்கு சலுகைகள் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – MIக்கு எதிராக களமிறக்கப்படும் பிளேயிங் 11 அணி!
இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயர இருக்கிறது. இந்நிலையில் சம்பள உயர்வு அறிவித்தது மட்டுமில்லாமல் தற்போது மற்ற அலோவன்ஸ்களும் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் உயரும். இத்துடன், ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் வர இருக்கிறது. அதனால் அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஊழியர்களின் பயண அலோவன்ஸ் (TA) மற்றும் சிட்டி அலோவன்ஸ் (CA)ஆகியவை உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் அதன் பிறகு தானாகவே TA மற்றும் CA உயர்த்தப்பட்டுவிடும். இதனால் சம்பளத்தில் மிகப் பெரிய உயர்வு இருக்கும். அதன் காரணமாக வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடையும் (Gratuity) தொகையும் அதிகரிக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்துதான் கணக்கிடப்படுகிறது. எனவே, அகவிலைப்படி அதிகரிப்பால் PF மற்றும் Gratuity அதிகரிப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.