தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14,15,16 மற்றும் 17 ஆகிய 4 நாட்கள் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பள்ளி விடுமுறை:
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ஆம் தேதி அதாவது சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டன்று பலரும் தங்களது காடு கரைகளில் உள்ள பயிர்களை அறுவடை செய்து அதனை ஒரு விழாவாக கொண்டாடுவது வழக்கம். இதனால் ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி புனித வெள்ளி தினமாக இருப்பதால் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Airtel, Jio, VI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!
இயேசுவை சிலுவையில் அறைந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி என கொண்டாடி வருகின்றனர். இயேசுவின் துன்பங்களை நினைவுகூரும் நாளாக புனித வெள்ளி கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்தவ சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்கள் அனைத்தையும் நினைத்து இத்தகைய புனித வெள்ளி நாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த புனித வெள்ளி ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் சண்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி அதாவது சித்திரை 2-ஆம் தேதி வருகின்ற காரணத்தினால் அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த இரு நாட்களும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.