TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!

0
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு - இன்னும் 4 நாட்கள் மட்டுமே!
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு - இன்னும் 4 நாட்கள் மட்டுமே!
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தேர்வர்களின் நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஆதார் இணைப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. இதில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office இல் வங்கியை விட அதிக வட்டி தரும் சூப்பரான திட்டம் – ஆண்டுக்கு 7.1 சதவீதம்! முழு விபரம் இதோ!

அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை அண்மையில் TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் 2 தேர்வு வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதால் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நாள் மதிப்பீடு செய்யப்படும்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

இதனை தொடர்ந்து மேலும் இது தொடர்பாக மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேர்வர்களின் ஒரு முறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான கால அவகாசம் வருகிற 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த கால அவகாசம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளதால் தேர்வர்கள் அனைவரும் விரைவாக தங்கள் ஆதார் விவரங்களை இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!