Post Office இல் வங்கியை விட அதிக வட்டி தரும் சூப்பரான திட்டம் – ஆண்டுக்கு 7.1 சதவீதம்! முழு விபரம் இதோ!

0
Post Office இல் வங்கியை விட அதிக வட்டி தரும் சூப்பரான திட்டம் - ஆண்டுக்கு 7.1 சதவீதம்! முழு விபரம் இதோ!
Post Office இல் வங்கியை விட அதிக வட்டி தரும் சூப்பரான திட்டம் - ஆண்டுக்கு 7.1 சதவீதம்! முழு விபரம் இதோ!
Post Office இல் வங்கியை விட அதிக வட்டி தரும் சூப்பரான திட்டம் – ஆண்டுக்கு 7.1 சதவீதம்! முழு விபரம் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி

கொரோனா கால கட்டத்தில் பெரும்பாலான தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஏனெனில் இதில் கிடைக்கும் வட்டி தொகையானது வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. அதனால் இந்த சேமிப்பு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த சேமிப்பு திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் முதலீடு செய்தால் வங்கிகளில் உள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் கிடைக்கும் வட்டியை விட அதிகமான வட்டி விகிதம் கிடைக்கிறது. மேலும் இதில் இபிஎப் கணக்கு இல்லாதவர்கள் இணைவதன் மூலமாக தங்கள் ஓய்வு காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதில் முதிர்வு காலம் முடியும் முன் கணக்கை முடித்து கொண்டால் இந்த திட்டத்தின் பயன்கள் முழுவதுமாக கிடைப்பதில்லை.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி!

இதில் இணைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ செலவு, படிப்பு செலவுக்காக தங்கள் கணக்கை முடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி விகிதம் வரை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை செலுத்தி கொள்ளலாம். மேலும் இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதலீடு தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அத்துடன் தற்போது இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் ஆன்லைன் முறையில் பண பரிவர்ததனைகளை மேற்கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!