ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி!
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் அபாயம் காரணமாக இந்திய நாட்டில் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலையும் என்றும் இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்வு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ரஷ்யா அதிபர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி உக்ரைனில் இருக்கும் பல நகரங்கள் மீது குண்டு வீசி தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தினார்கள். மேலும் உக்ரைனில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டங்கள்!
மேலும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. அத்துடன் இந்திய பங்கு சந்தையில் கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,874க்கு விற்பனையாகிறது.
Post Office இல் சேமிக்க நினைப்போர் கவனத்திற்கு – குறைந்தபட்சம் ரூ.100 முதல்! சூப்பர் திட்டங்கள்!
அத்துடன் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 38,992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்கள். அத்துடன் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60 ஆக விற்பனை செய்யப்பட்டது. இன்று 80 காசுகள் உயர்ந்து ரூ.71.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெறுவதால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.