மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஜூலை மாதத்தில் மேலும் 4% அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக அதிகரிக்கும்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு முதல் அகவிலைப்படியை 2 கட்டங்களாக உயர்த்தியது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்! அரசு முடிவு!
அதன்படி 31% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது. கடந்த 1ம் தேதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அதிகரிக்கும் பண வீக்கத்தின் காரணமாக ஊழியர்களின் நலன் கருதி வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 4% ஆக அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி மொத்தம் 38% ஆக உயரும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் உயர்வு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அகவிலைப்படி உயர்வு 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.