1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்! அரசு முடிவு!
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பத்தின் காரணமாக அனைத்து பள்ளிகளும் மே 7ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் கடந்த ஒரு சில வாரங்களாக நிலவிக்கொண்டிருக்கும் கோடை வெப்பநிலையை கவனத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகளையும் மே 7ம் தேதி முதல் ஆஃப்லைன் வகுப்புகளை மூட வேண்டும் என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் தீவிர வானிலை காரணமாக மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றுமாறு தனியார் பள்ளிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று முதல் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் திடீர் உத்தரவு!
அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இன்று (மே 7) முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் மூடுவதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான புதிய உத்தரவுகளில், அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆஃப்லைன் வகுப்புகளை நிறுத்திவிட்டு ஆன்லைன் பயன்முறைக்கு மாறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தும் படி பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் மணீஷ் ஜெயின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக, மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறையை தொடங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகள் மாநிலத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக, மே 2 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறையை தொடங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் பாதுகாவலர்களின் வேண்டுகோளின்படி வகுப்புகளை தொடர முடிவு செய்ததாக கூறப்படுகிறது.