BHEL நிறுவனத்தில் மாதம் ரூ.37,500 ஊதியத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா பரவிய பெருந்தொற்று காலத்தில் இருந்து வேலை வாய்ப்பு என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது வருகிறது. தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட தொழில் சரிவால் வேலை வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்தது மக்கள் கடந்த வருடம் சற்று இயல்பு நிலையை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வந்தனர்.
காதலில் விழுந்த விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி? அவரே அளித்த விளக்கம் – ரசிகர்கள் ஷாக்!
அந்த வகையில் தற்போது அரசு துறை வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. தற்போது மத்திய அரசு நிறுவனமான பெல் காலியாக உள்ள 75 வெல்டர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஐடிஐ கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும். இந்திய பாய்லர் ஒழுங்குமுறை விதிகளின் படி 1950 க்கு உட்பட்ட தகுதிவாய்ந்த வெல்டர் என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் வெல்டர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் நபர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை! மார்ச் 31 கடைசி நாள்!
1 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மாதந்தோறும் ரூ.37,500 ஊதியமாக வழங்கப்படும். மேலும் 10,000 வாய் இதர படிகளும் உண்டு. இப்பணியில் சேருபவர்களின் மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு ரூ.2 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு அளிக்கப்படும். ஆன்லைன் வாயிலாக பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக இணையதளம் வாயிலாக ரூ. 200 செலுத்த வேண்டும்.