காதலில் விழுந்த விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி? அவரே அளித்த விளக்கம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமான ஷிவாங்கி ஒரு திரைப்படத்தை பார்த்து தனக்கு 8 வருடங்களுக்கு முன் காதல் மீது நம்பிக்கை வந்ததாக கூறியுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குக் வித் கோமாளி ஷிவாங்கி
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘சூப்பர் சிங்கர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் ஒரு பாடகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் வெகுளித்தனமான பேச்சாலும், குழந்தைத் தனமான செயலாலும் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த ஷிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்தார். இந்த ‘குக் வித் கோமாளி’ ஷோவின் மூலம் ஷிவாங்கிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகியாக தடம் பதித்த ஷிவாங்கி தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ மற்றும் வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவாங்கி தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் காதல் குறித்த முக்கிய பதிவு ஒன்றை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் சில கேள்விகளை உருவாக்கி இருக்கிறது. அதாவது கடந்த 2014ம் ஆண்டு நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் நடிப்பில் உருவான ‘ஓம் சாந்தி ஓசன்னா’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ளது.
இந்த திரைப்படம் டாக்டருக்கும், விவசாயிக்கும் இடையே இருக்கும் காதலை இளமை ததும்ப சொல்லும் அழகான திரைப்படம் ஆகும். இப்போது இந்த ‘ஓம் சாந்தி ஓசன்னா’ என்ற திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை பதிவிட்டு, நான் காதலை நம்ப துவங்கிய இந்த ஸ்பெஷல் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிறது என்று ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் ஷிவாங்கி காதலில் விழுந்துவிட்டாரோ என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.