மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உயர்வு, DA 34% ஆக அதிகரிப்பு – அறிவிப்பு எப்போது?
வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும். தற்போது, மத்திய ஊழியர்களுக்கு 31 சதவீதம் டிஏ கிடைக்கிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளையும் அரசு வெளியிடும் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அகவிலைப்படியை மேலும் 3 சதவீதம் வரை உயர்த்தலாம் என்றும் இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவு உயரும் என்றும் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அறிவிப்புக்குப் பிறகும், 2022 யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் அகவிலைப்படி 3 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனால் மொத்த டிஏ 34 சதவீதமாக உயரும். அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் பெருக்கி கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படியின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பிறகு அரசு DA ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறது, இதன் விளைவாக பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், டிஏ 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 – வேட்பாளரின் அருமையான வாக்குறுதி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி X, Y & Z நகரங்களுக்கு முறையே 24 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்று செலுத்தப்படுகிறது. இதற்கான தொகையாக ரூ.5400, ரூ.3600 மற்றும் எக்ஸ், ஒய் மற்றும் இசட் நகரங்களுக்கு ரூ.1800க்கு குறைவாக இருக்கக்கூடாது என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், டிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஏனென்றால், அரசின் பழைய உத்தரவின்படி, டிஏ 50 சதவீதத்தைத் தாண்டினால், மட்டுமே HRA 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என்று உயர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.