தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்தில் அஞ்சல்துறையின் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணிக்கான நேரடி முகவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்:

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வரும் இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அதன்படி தற்போது மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் படித்த இளைஞர்கள் தங்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 – வேட்பாளரின் அருமையான வாக்குறுதி!

அவ்வப்போது அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சல்துறையின் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணிக்கான நேரடி முகவா் ஆட்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் 5 ஆயிரம் ரூபாயை காப்பீடு தொகையை சேமிப்பு பத்திர வடிவில் இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து தங்களின் அருகில் உள்ள அஞ்சலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் அஞ்சலகத்தில் இருந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்வித் தகுதி சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து பிப்ரவரி 22ம் தேதிக்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!