மத்திய அரசில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம் ரூ.32,000! விண்ணப்பங்கள் வரவேற்பு!
வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய மாநில வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையிழந்து அன்றாட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தொடர்ந்து 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய பணி நியமனங்களும் நடைபெறவில்லை. காலிப்பணியிடங்கள் நிரப்படாததால் ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. தற்போது 2022ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
ஜனவரி 21 முதல் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் விடுமுறை | அரசு அறிவிப்பு!
அந்த வகையில் தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் மாற்றங்களையும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்னிந்திய மாநில வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர், கணக்காளர், கிளை மேலாளர் உள்ளிட்ட 48 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அலுவலக உதவியாளர்:
இப்பணியில் 10 காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ. 20,200 ஊதியமாக வழங்கப்படும்.
விற்பனையாளர்:
இப்பணியில் 22 காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.26,200 ஊதியமாக வழங்கப்படும்.
மேற்பார்வையாளர்:
- காலியிடங்களின் எண்ணிக்கை: 8
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.28,200 வழங்கப்படும்.
கணக்காளர்:
- காலியிடங்களின் எண்ணிக்கை: 4
- கல்வித் தகுதி: பட்டப்படிப்பு B.Com முடித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 30,200
கிளை மேலாளர்:
- காலியிடங்களின் எண்ணிக்கை: 4
- கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
- சம்பளம்: ரூ. 32,200. வயது தகுதி : 01.01.2022 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு சலுகை உண்டு.
மேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் 28.02.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.