ஜனவரி 21 முதல் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் விடுமுறை | அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது அம்மாநில பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 21 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
கேரளாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவல் மூன்றாம் அலை என்றும், டெல்டாவை போல வேகமாக பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஒரு நாளைக்கு 18,000 மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் கேரள அரசு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இதை தொடர்ந்து கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 21 ஆம் தேதி முதல் தொடர்ந்து 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க அம்மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. பள்ளிகள் மூடப்படுவதாக அறிவித்ததால் அம்மாநில பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களின் கல்வித்திறன் குறைய வாய்ப்பு உள்ளதாக கருதுகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
கேரளாவில் கொரோனா மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 21 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கும் அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தப்படும் என்றும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எந்தவித தடையுமின்றி பள்ளிக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.