மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – DA 31% அதிகரிப்பினால் வரவுள்ள தொகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி, ஓய்வூதிய படி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் அதன் மூலம் மற்ற படிகளும் அதிகரிக்க உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR ஆகியவற்றை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் புதிய திருப்பம் – முக்கிய விபரங்கள் சேகரிப்பு!
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA தொகை 28% ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு அகவிலைப்படியை 17 லிருந்து 28 சதவீதமாக உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட DA தொகை 2021 ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வழங்கபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் டி.ஏ. உயர்வு மாதாந்திர வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கிராவிட்டி தொகையை உயர்த்தும். எனவே பி.எஃப்., பயண கொடுப்பனவு மற்றும் கிராச்சுட்டி ஆகியவை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அதிகரிக்கும்.
அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 சம்பள உயர்வு – மகிழ்ச்சியில் பணியாளர்கள்! சூப்பர் அறிவிப்பு!
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை தொழிலாளர் அமைச்சகம் AICPI வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த டிஏ உயர்வு விரைவில் அறிவிக்கப்படலாம். அது 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 31% DA வழங்கிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் ரூ 18000 கொண்ட தங்களது அடிப்படை ஊதியத்துடன் மாதம் ரூ. 540 கூடுதலாகவும், ரூ.56900 அடிப்படை ஊதியமாக கொண்ட ஊழியர்கள் மாதம் ரூ 1707 அதிகமாகவும் பெறுவார்கள். அதன்படி அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20,484 அதிகமாக வழங்கப்படும்.