தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இந்த குழந்தைகளுக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு இடம், படிப்பிற்கு தேவையான தொகை ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது நெருங்கிய சோதனைகளை இழந்துள்ளனர். பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். மேலும் குடும்பத்தில் சம்பாரிக்கும் உறுப்பினர் இறந்துள்ளனர். இதனால் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
SBI ATM கட்டணம் முதல் சிலிண்டர் விலை வரை – ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
இதனால் தமிழக அரசு கொரோனவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக கடந்த மே மாதம் 29 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் தொகை வைப்பீடு செய்து அதனை 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வட்டியுடன் வழங்கப்படும் எனவும்,
அவர்களுக்கு இலவச அரசு இடம் வழங்கவும், அவர்கள் படிப்பதற்கு தேவையான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையம் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கவும், விடுதிகளில் தங்காமல் உறவினர் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளுக்குமாதம் 3000 ருபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக நலத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், தமிழக அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியலில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபரின் பெயர் இருந்தால் மட்டுமே இந்த திட்டம் மூலமாக உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இறந்தவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிய கூடாது. என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக திட்டத்தின் பயனடைவோர்களை குறைக்கும் நோக்கத்தில் உள்ளது. மேலும் கொரோனவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடம் பாகுபாடை உருவாக்குவது போல் உள்ளது. எனவே முதல்வர் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.