இன்று முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். அதில் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இலவச மின்சாரம்:
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை ஒவ்வொரு கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், மார்ச் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் அதனை தொடர்ந்து உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் ஒவ்வொரு கட்சியினரும் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
Exams Daily Mobile App Download
அதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். தற்போது இந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகையினர் மட்டும் கூடுதல் யூனிட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? வேகமாக பரவும் BA4 கொரோனா எதிரொலி!
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் முந்தைய அரசுகள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியாக அமைத்துள்ளது. அதன்படி பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளோம். அதாவது இன்று முதல்(ஜூலை 1) பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.