ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி – Airtel, Jio உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு!

0
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி - Airtel, Jio உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு!
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி - Airtel, Jio உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு!
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி – Airtel, Jio உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் அதிகமானவர் (WORK FROM HOME ) வீட்டில் இருந்து வேலை செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய இணைய சேவை கட்டணத்தை அதிகரித்தது. இதனால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இந்த வகையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 நாட்கள் வேலிடிட்டி:

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறி கொண்டே வருகிறது. அந்த வகையில் செல்போன் தேவை அதிகமாகியுள்ளது. உலகத்தில் எங்கு இருந்தாலும் அனைத்து தகவல்களையும் செல்போன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து செல்போன் பயன்பாடு இணைய சேவை இல்லாமல் இல்லை. செல்போன் தேவைக்கு இணைய சேவை( நெட்வொர்க்) முக்கிய பங்கு வகித்து வருகிறது .

நாடு முழுவதும் பிப்ரவரி 28 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!

இந்நிலையில் இந்தியாவில் பல முன்னணி சேவை நிறுவனங்கள் செல்போன் சேவைகளை இயக்கி வருகின்றன. முதலில் இன்கமிங் பிரீ ,இன்டர்நெட் பிரீ என பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தனர். இந்த சலுகைகள் மூலம் அனைத்து நிறுவனங்களும் பல்வேறு வாடிக்கையாளர்களை பெற்று உள்ளனர். இந்த வகையில் ஜியோ நிறுவனம் ஒரு நாளைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் என அறிவித்து அபார வளர்ச்சி கண்டது. பிறகு ஒரு நாளைக்கு 1 ஜிபி என குறைத்து, தற்போது 250 ரூபாய் முதல் ரீசார்ஜ் செய்தால் இன்டர்நெட் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பெறலாம் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இணைய சேவை கட்டணத்தை Airtel, Jio உள்ளிட்ட நிறுவனங்களும் உயர்த்தியது. மேலும் 30 நாள் வேலிடிட்டி 28 நாட்களாக குறைக்கப்பட்டது. இதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். 30 நாள் வேலிடிட்டி ஆக இருக்கும் போது ஆண்டுக்கு 12 முறை ரீசார்ஜ் செய்தால் போதும், வேலிடிட்டி 2 நாள் குறையும் போது ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு செல்கின்றனர். இது தொடர்பான புகார்கள் டிராய் அமைப்புக்கு அதிகமாக வந்தது. இந்த நிலையில் ப்ரீபெய்ட் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!