நாடு முழுவதும் பிப்ரவரி 28 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!
தற்போது மாநிலங்கள் தோறும் கொரோனா 3ம் அலைத்தடுப்பு கட்டுப்பாடுகளாக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் (MHA) அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸின் அதீத வளர்ச்சியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மஹாராஷ்டிரா. டெல்லி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்கள் தோறும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களை பிப்ரவரி 28 வரை நீட்டித்து உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவு, பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மாநிலங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘புதிய மாறுபாட்டான ஒமிக்ரான் வைரஸினால் ஏற்பட்ட கொரோனா 3ம் அலை காரணமாக, நாட்டில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 22 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. என்றாலும் பெரும்பாலானோர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் மருத்துவமனை அனுமதி குறைவாக இருந்தாலும், இருப்பினும் இன்னும் 407 மாவட்டங்களில் 10% க்கும் அதிகமான நேர்மறை விகிதம் பதிவு செய்யப்பட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கிடையாது – முதல்வரின் அதிரடி முடிவு! பின்னணி காரணங்கள் என்ன?
எனவே, கொரோனா வைரஸின் தற்போதைய நிலைமைகளை கவனிக்கையில் மக்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா நேர்மறை விகிதம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் அனைத்து உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.